ஐந்து இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ரஜினி பட இயக்குநர்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் ‘கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ்’ மற்றும் ‘லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ்’ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச தமிழ் சினிமா சந்தைக்கு 5 படங்களை ஸ்லேட் செய்வதாக அறிவித்துள்ளனர். மற்ற இயக்குனர்கள் ப.ரஞ்சித்தின் நெருங்கிய ஒத்துழைப்பாளர்களான சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், மற்றும் பிராங்கிளின் ஆகியோருடன், தனுஷை வைத்து இயக்கிய மாரி செல்வராஜும், விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய லெனின் பாரதியும் இதில் அடங்குவர். இந்த 5 படங்களும் மிக பெரிய திரை வெளியிட்டிற்காக திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், இந்த படங்கள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படவுள்ளன.

‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்புகளான “இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு” மற்றும் “பரியேறும் பெருமாள்” இரண்டும் விமர்சன மற்றும் வணிக ரீதியாக வெற்றிகளுக்கு பெயர் பெற்றவை. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இரண்டு முறை இயக்கிய இளம் இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித், “அட்டக்கத்தி” மற்றும் “மெட்ராஸ்” போன்ற காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார்.

பா.ரஞ்சித் தயாரிப்பாளராக தனது பங்கைப் பற்றி பேசும்போது, “சினிமா என்பது ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கானவர்களுடன் பேசக்கூடிய ஒரு சக்திவாய்ந்த ஊடகம். ஒரு நல்ல படம் எவ்வாறு பார்வையாளர்களால் ஏற்கப்படுகிறது, மதிக்கப்படுகிறது என்பதை நாம் அனைவரும் இந்த சினிமா துறையில் கண்டிருக்கிறோம். நான் தயாரித்த முதல் இரண்டு படங்களையும் மக்களுடன் இணைக்க முடிந்ததற்கு மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். கதை சொல்வது என்பது வெகுஜனங்களுடன் தொடர்புகொள்வது பற்றியது. நான் இறுதியாக இந்த கதைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று பேசினார்.

தமிழ் திரையுலகம் இந்தியாவின் பல திரைப்படத் துறைகளை விட மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒன்றாகும். பிற மொழிகளில் உள்ள அனைத்து இந்திய படங்களுக்கும் மொத்த பாக்ஸ் ஆபிஸ் பங்களிப்பில் தமிழ் சினிமா கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை பங்களிப்பு செய்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தி படங்களைப் போலவே, நம் தமிழ் திரைப்படங்களான “வட சென்னை”, “96”, “பரியேறும் பெருமாள்” ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய மதிப்பை பெற்றுள்ளது.

‘கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ்’ மற்றும் ‘லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ்’ சமீபத்தில் நடிகர் தனுஷின் “பக்கிரி” திரைப்படத்தை இணைந்து தயாரித்து விநியோகித்தனர். இது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் உட்பட 6 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளில் உலகளவில் வெளியிடப்பட்டது.

‘லிட்டில் ரெட் கார் பிலிம்ஸின்’ விளம்பரதாரர் மற்றும் இயக்குனரான அதிதி ஆனந்த் கூறுகையில், “நான் எப்போதுமே பா.ரஞ்சித் என்கிற இயக்குனரின் ரசிகை. ஆனால் ஒரு தயாரிப்பாளராக அவரது அர்ப்பணிப்பால் நான் திகைத்துப் போயிருக்கிறேன். ” பரியேறும் பெருமாள்” படத்தின் மூலம் என்னை ஆச்சரியப்பட செய்தார். மேலும் அது போன்ற ஒரு தரமான திரைப்படத்தை மீண்டும் பா ரஞ்சித் மற்றும் எங்கள் அற்புதமான, திறமை வாய்ந்த இயக்குநர்கள் மூலம் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

‘கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ்’ என்பது சிங்கப்பூரைச் சேர்ந்த ‘விஸ்டாஸ் மீடியா கேபிட்டலின்’ திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும். இது பியுஷ் சிங் மற்றும் அபயானந்த் சிங் ஆகியோரால் கவனிக்கப்படுகிறது. அடுத்த 6 மாதங்களுக்குள் இந்நிறுவனம் திரைப்படங்களை வெளியிட உள்ளது. இந்நிறுவனம் 12 திரைப்படங்களை வரிசையைக் கொண்டுள்ளது. அவை அனைத்தும் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. மேலும் இந்த நிறுவனம் சமீபத்தில் ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளது.

‘கோல்டன் ரேஷியோ பிலிம்ஸின்’ இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அபயானந்த் சிங் கூறுகையில், “வணிக மற்றும் விமர்சன வெற்றிகளுக்கு இடையில் ஒரு நல்ல சமநிலையை அடைவதற்கான புதிய திறமைகளை இது காண்கிறது என்பதால், நாங்கள் எப்போதும் தமிழ் திரைப்படங்களை பன்முகப்படுத்த விரும்புகிறோம். புதிய இயக்குநர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் ஆகிய இருவரையும் உள்ளடக்கிய படங்களை உருவாக்குவதில் பா.ரஞ்சித் போன்ற ஒருவரை இதற்கான தலைமையில் வைத்திருப்பது இன்னும் சுவாரஸ்யமானது” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Response