தங்கவேலு மாரியப்பன் வாழ்க்கையை படமாக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

c1bpopjviaaxpghதனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த ‘3’ படத்தை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ். ‘3’ படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடித்த ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார். தற்போது சினிமாவில் ஸ்டண்ட் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘சினிமா வீரன்’ என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் புதிய படமொன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த மாற்றுத்திரனாளிகளுக்கான ‘பாரலிம்பிக்’ போட்டியில் தங்கம் வென்ற தங்கவேலு மாரியப்பனுடைய வாழ்க்கையை படமாக்கவுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். இப்படத்திற்கு ‘மாரியப்பன்’ என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். குக்கூ, ஜோக்கர் படத்தின் இயக்குனர் ராஜு முருகன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு அன்று வெளியிட்டார்.

Leave a Response