ஜெயலலிதா முகம் பதித்த 68 கிலோ இட்லி


4_3106259aதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் ஜெயலலிதாவின் உருவத்தில் 68 கிலோ எடையுள்ள இட்லி செய்யப்பட்டு அவரது நினை‌விடத்தில் படைக்கப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் கடந்த 6-ஆம் தேதி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 16-ஆம் நாள் துக்கம் அனுசரிக்கும் விதமாக, அவரின் உருவத்தில் 68 கிலோ எடையுள்ள இட்லியை சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின‌ர் மற்றும் ஆர்.கே.நகர் மக்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட இட்லியை அவரது நினைவிடத்தில் படையலிட்டு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா உருவ இட்லியை அனைவரும் காணும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


 

Leave a Response