ஜெயலலிதா உடல்நிலை பற்றி பிரதமர் மோடி கேட்டறிந்தார்


1439_modi-jayaதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு  உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை தொடர்பு கொண்டு கேட்டார்.

ஜெயலலிதாவுக்கு செய்யப்பட்டு வரும் சிகிச்சை குறித்து நட்டா, மோடிக்கு விளக்கிக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தமிழக அரசு கேட்டுக் கொண்டால், தமிழகத்துக்குத் தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.


 

Leave a Response