சந்தானம்-செல்வராகவன் இணையும் படத்தின் படபிடிப்பு தொடங்கியது


santhanamஇயக்குனர் செல்வராகவன் – நடிகர் சந்தானம் முதன் முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜெ .சூர்யா, நந்திதா நடித்துள்ள ’நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதையடுத்து நடிகர் சந்தானத்தை வைத்து இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. சந்தானமும், செல்வராகவனும் சேர்ந்து நிற்பது போன்ற புகைப்படத்தை இருவரும் அவர்களது டிவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கதாநாயகி யார் என்று படக்குழுவினர் இன்னும் முடிவெடுக்கவில்லை.


 

Leave a Response