கராச்சியின் ரெஜெண்ட் பிளாஸா தங்கும் விடுதியில் இன்று அதிகாலை தீ விபத்து நேரிட்டது. இந்த தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். 65 பேர் காயமடைந்தனர்.
தங்கும் விடுதியின் தரைதளத்தில் இயங்கி வந்த சமையலறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, இது படிப்படியாக 6 மாடிகளுக்கும் பரவியது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரக்ரள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் காயமடைந்த 65 பேர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களில் 2 மருத்துவர்கள் உட்பட 6 ஆண்களும், 4 பெண்களும் அடங்குவர்.