நாஞ்சில் சம்பத் மீண்டும் ‘இனோவா சம்பத்’தாக மாறினார்

sasi‘அதிமுக’ பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்ற பின், தன்னிடம் ஜெயலலிதா கொடுத்த இனோவா காரை அதிமுக தலைமை செயலகத்தில் ஒப்படைத்தார். மேலும் ‘அதிமுக’வில் இருந்து விலகப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்துள்ளார் நாஞ்சில் சம்பத். சசிகலாவை சந்தித்த பிறகு அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றப் போவதாகவும் சசிகலாவின் ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதே ‘இனோவா’ காரில் தான் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், இனிமேல் மீண்டும் நாஞ்சில் சம்பத் ‘இனோவா சம்பத்’ என அழைக்கப்படுவார் என்றும் தெரிகிறது.

நாஞ்சில் சம்பத் ‘அதிமுக’வில் தொடரப்போவதாக இருந்தால், ஏன் தன்னிடம் கொடுத்த இனோவா காரை திருப்பிக் கொடுக்கவேண்டும்?, கட்சியை விட்டு விலகுவதாக ஏன் சொல்லவேண்டும்?. இந்த இடைவேளையில் கொடுக்கல் வாங்கல் எதுவும் இருந்ததா? என்று தெரியவில்லை.

இப்படிப்பட்ட கேள்விகள் மக்கள் மனதிலும், மற்ற அதிமுக தொண்டர்களின் மனதிலும் உலாவிவருகிறது.

Leave a Response