முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார்; விரைவில் வீடு திரும்புவார் என சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்


70th Independence Day celebration at Chennaiசென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சி.ஆர். சரஸ்வதி, முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களும், சிறப்பு மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர் விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறினார்.

மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவர் விரைவில் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று கூறினார்.

பொதுமக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த ஜெயலலிதாவை, மருத்துவர்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

மற்றபடி, அவர் நலமாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார். கடவுள் அவர் பக்கம்தான் உள்ளார்  என்றும் சரஸ்வதி தெரிவித்தார்


 

Leave a Response