மீண்டும் மஞ்ஜிமா மோகனை இயக்கும் கௌதம் மேனன்


gautham-menon-manjima-mohan-759கௌதம் மேனன் இயக்கி இருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் சிம்புவிற்க்கு ஜோடியாக மஞ்ஜிமா மோகன் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிவரும் படம் ’எனை நோக்கி பாயும் தோட்டா’.

இதை அடுத்து நான்கு மொழி படம் ஒன்றை உருவாக்கிவருகிறார். இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ‘ஒன்றாக’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்காக தமிழிலிருந்து ஜெயம் ரவி, மலையாளத்திலிருந்து ப்ருத்விராஜ், தெலுங்கிலிருந்து சாய் சரண்தேஜ், கன்னடத்திலிருந்து புனித் ராஜ்குமார், அதேபோல்… அனுஷ்கா, தமன்னா இருவரும் இப்படத்தின் ஹீரோயின்களாகவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள்.

தமிழுக்கான கதாநாயகி மஞ்ஜிமா மோகன் தான் என்று ஒரு பேட்டியின் மூலம் அவர் தெரிவித்தார். தற்போது விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘முடிசூடா மன்னன்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் மஞ்சிமா.


 

Leave a Response