அடேய் மலைமுழுங்கி அப்போலோ – கலாய்த்த கஸ்தூரி..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உணவு செலவுக்கு கோடிக்கணக்கில் கணக்கு காட்டியுள்ள அப்போலோ நிர்வாகத்தை நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது 75 நாட்கள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்த்துவிட்டு வெளியே வந்ததாக கூறிய சி.ஆர்.சரஸ்வதி போன்றோர் அம்மா நன்றாக இருக்கிறார். இட்லி சாப்பிட்டார்.. என பேட்டியளித்தனர். அதேபோல், வேக வைத்தை ஆப்பிள் சாப்பிட்டதாக அப்போலோ தரப்பிலும் கூறப்பட்டது. ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, பல மாதங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களில் அவரது உணவுக்காக ரூ.1.17 கோடி செலவானதாக அப்போலோ நிர்வாகம் தரப்பில் ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, 2 இட்லிக்கு ரூ.1.17 கோடியா? தெருக்கடையில வாங்கிக் கொடுத்திருந்தார் ரூ.5 ஆயிரம் கூட ஆகி இருக்காதே என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில்,

என பதிவிட்டு கலாய்த்துள்ளார்.

Leave a Response