டிஜிட்டலில் வெளியாகிறது “நினைத்தாலே இனிக்கும்”!

1259_17_f

பல பழைய காவியங்கள் வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிவரும் காலம் இது. ஆகஸ்ட் 15ஆம் தேதி கூட சிவாஜி, ஜெமினி நடித்த பாசமலர் படம் டிஜிடலில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து தற்போதைய கலையுலகின் இரண்டு மன்னர்கள் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படம் வெளியாக இருக்கிறது.

1979ல் வெளியான, “நினைத்தாலே இனிக்கும், பாலசந்தர் இயக்கத்தில், ரஜினி,  கமல், ஜெயப்பிரதா, கீதா நடித்த இந்த படம், அந்த கால இளைஞர்களிடையே, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. “யாதும் ஊரே யாவரும் கேளிர், சம்போ சிவ சம்போ, நம்ம ஊரு சிங்காரி போன்ற, எம்.எஸ்.வி.,யின் மெல்லிசையால், ரசிகர்களை வசியம் செய்தது அந்த படம். இப்போது, மீண்டும் இந்த படத்தை, புத்தம் புது பொலிவுடன், மெருகேற்றி, புதிய தொழில்நுட்பத்தில் வெளியிடப் போகின்றனராம். செப்டம்பர் மாதத்தில் வெளியாகவிருக்கிறது இந்த “நினைத்தாலே இனிக்கும்”.