இயக்குநர் விஜய் இயக்கத்தில், விஜய் நடித்து இன்று ரிலீசாக இருந்த ‘தலைவா’ படம் சில பல காரணங்களால் தமிழகத்தில் மட்டும் ரிலீசாகவில்லை. ஏற்கனவே, ஆன்லைனிலும், நேரடியாகவும் முன்பதிவு செய்திருந்த ரசிகர்களுக்கு தலைவா இன்று ரிலீசாகவில்லை என்ற செய்தி மிகவும் சோகத்தைத் தந்துள்ளது.
இந்நிலையில் தன் சக நடிகரின் படம் ரிலீஸ் தாமதமாவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் சிம்பு. மேலும், இதனால் மனமுடைந்த விஜய் ரசிகர்களுக்கு அவர் ஆறுதல் கூறியுள்ளார்.
இது குறித்து ட்வீட்டரில் அவர், ‘விஜய் அண்ணா ரசிகர்களே, கவலைப்படாதீர்கள். எப்போதும் மழை பொழிந்து கொண்டே இருக்காது. விரைவில் சூரிய வெளிச்சம் உதயமாகும். அதுவரை அமைதியாகவும், பொறுமையாகவும் இருங்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இப்பிரச்சினை குறித்துக் கேள்விப்பட்டு தான் மிகவும் கவலைப்பட்டதாகவும், விரைவில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார் சிம்பு.
இது தவிர சிம்புவின் நண்பர், நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில், “தலைவா படத்திற்கு வந்துள்ள நிலைமை சரியில்லை. அவர்கள் ஒரு படத்தை தடை செய்ய எடுத்துகொள்ளும் முயற்சியை இந்த நாட்டின் நலனுக்கு எடுத்துகொண்டால் நன்றாக இருக்கும்.
மேலும் படம் உண்மைக்கதையோ அல்லது உண்மையான மனிதர்களையோ மையப்படுத்தி எடுக்கபடாதபோது எப்படி தடை செய்ய முடியும், விரைவில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். முதலமைச்சர் படம் வெளியாக உதவி செய்வார்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.