UFO மூவீஸ், ஸ்க்ராபிள் டிஜிட்டல் மற்றும் க்யூப் சினிமாவிற்கு 2.7 கோடி ரூபாய் அபராதம் விதித்த காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியா
நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபட்டதற்காக UFO மூவீஸ் இந்தியா, அதன் துணை நிறுவனம் ஸ்க்ராபிள் டிஜிட்டல் மற்றும் க்யூப் சினிமா டெக்னாலஜீஸ் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.2.7 கோடி அளவில் நிதி அபராதங்கள் மற்றும் பிற தண்டனைகளை விதித்துள்ளது காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியா(CCI) என்கிற இந்திய போட்டி ஆணையம்.
இந்த நிறுவனங்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு (CTOs) டிஜிட்டல் சினிமா ஸ்டாண்டர்டுக்கு ஏற்ப இணக்கமான உபகரணங்களை வாடகை/குத்தகைக்கு வழங்கும் சந்தையில் முக்கிய பங்கு வகித்தன.
CCI வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நிறுவனங்கள் CTOs உடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களில் உள்ளடக்க விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்தன, இதன் மூலம் பிற பின்னணி தயாரிப்பு(போஸ்ட் புரொடக்ஷன்) சேவைகளுக்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டன.
மேலும், இந்த நிறுவனங்கள் DCI இணக்கமான உபகரணங்களை பெற்ற CTOs-களில் பெரும்பாலானவர்களை பிற சேவைகள் பெற முடியாத நிலைக்கு தள்ளின.
இந்த போட்டி சட்டத்தை மீறியதால், இந்திய போட்டி ஆணையம்(CCI), UFO மூவீஸ் மற்றும் ஸ்க்ராபிள் டிஜிட்டலுக்கு ரூ.104.03 லட்சம் மற்றும் க்யூப் சினிமாவிற்கு ரூ.165.8 லட்சம் அபராதமாக விதித்துள்ளது. அதோடு, இந்த நிறுவனங்கள், பிற தரப்புகளில் இருந்து உள்ளடக்கம் பெறுவதில் CTOs மீது எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கக் கூடாது எனவும் கட்டளையிட்டுள்ளது.
நடப்பிலுள்ள ஒப்பந்தங்களும் திருத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது, அதாவது உள்ளடக்கம் விநியோகத்தில் எந்த நிறுவனத்திலிருந்தும் CTOs தாங்கள் சுதந்திரமாக பெறலாம் என்பதற்கு உத்தரவிட்டுள்ளது.
UFO மூவீஸ் இந்த சந்தையில் சுமார் 40% பங்கையும், க்யூப் சினிமா சுமார் 48% பங்கையும் கொண்டிருப்பதை CCI குறிப்பிட்டுள்ளது. இவர்கள் இணைந்த ஒப்பந்தங்களில் விதிக்கப்பட்ட விதிமுறைகள் போட்டியை தடுக்கக்கூடியவை என்றும், இணைப்பு ஏற்பாடுகள்(tie-in arrangements) ஒப்பந்தம், தனிச்சார் விநியோக ஒப்பந்தம் போன்றவை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு PF Digital Media Services Ltd (தற்போது DNEG India Media Services Ltd) மற்றும் ஒரு தயாரிப்பாளரின் புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. அந்த புகாரின் படி, UFO மற்றும் ஸ்க்ராபிள் டிஜிட்டல், CTOs மீது மற்ற நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற முடியாதவாறு தனிச்சார் விதிகளை விதித்ததாக கூறப்பட்டது.
இதனால், சுதந்திரமான பின்னணி தயாரிப்பு நிறுவனங்கள்(Third Party Post Production Houses) இயங்கும் சுதந்திரம் குறைக்கப்பட்டதாகவும், மெய்நிகர் தடைகள் உருவானதாகவும் தலைமை இயக்குநர்(விசாரணை) அதிகாரி தெரிவித்தார்.