ஆஜ் தக் ஹிந்தி சேனலில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் பெயர் ஆஜ் தக். இதில் நிகழ்ச்சியில் அமைச்சர் அமித் ஷா-வும், பாலிவுட் நடிகரான வருண் தவானும் கலந்து கொண்டனர்.
அப்போது ராமனுக்கும் மற்றும் ராவணனுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய வேறுபாடு என்ன என்று அமித்ஷாவிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், சிலர் தங்களது விருப்பங்களை தங்களுடைய கடமைகளைக் கொண்டு தீர்மானிக்கின்றனர், சிலர் தங்களது கடமைகளை அவர்களது விருப்பத்தைக் கொண்டு தீர்மானிக்கின்றனர். இதுதான் இரண்டு பேருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்று கூறினார்.
ராமனின் வாழ்க்கை அவரது தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கும், அதே நேரத்தில் ராவணன் தனது சொந்தக் கொள்கை மற்றும் எண்ணங்கள்படி தனது கடமைகளை மாற்ற முயன்றார் என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த நடிகர், நீங்கள் ஆணவத்தை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். ராவணன் தனது அறிவை பற்றி பெருத்த கர்வத்துடன் இருந்தார், ஆனால் ராமன் ஆணவத்தை பற்றி அறிந்திருந்தார் என்று தெரிவித்தார். இதற்கு அமைச்சர் இதுவும் தர்மத்தின் வரையறுக்குள் தான் வருகிறது என்று கூறினார். இதையடுத்து அமித்ஷா, நடிகர் வருண் தவானை பாராட்டினார். அரசியலில் மக்கள் என்னை சாணக்கியர் என்று அழைக்கிறார்கள், ஆனால் தேசத்திற்கு தன்னலமின்றி சேவை செய்யும் அனுமான் என்று வருணை அழைக்க விரும்புகிறேன். வசனங்களை மனப்பாடம் செய்யும் நடிகர்களால் கூட இவ்வளவு தெளிவாக பேச முடியாது என்று கூறினார்.