அமித்ஷா வருகையொட்டி காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப் பெருந்தகை!

நாளை பிப்ரவரி 25 ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ள நிலையில், அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை “புரட்சியாளர் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசியும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க நாளை வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக எனது தலைமையில் மாபெரும் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கோவையில் உள்ள ஈஷா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள தமிழகம் வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆந்திரம், ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு 1,555 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருந்தார். இதில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response