சில டைம் டிராவல் படங்களை உருவாக்கிய தமிழ் சினிமாவில், முதன் முறையாக டைம் லூப் கதையில் ஒரு படம்…

பல வகையான வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக டைம் லூப் எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக உருவாகி வருகிறது இந்த ஜாங்கோ திரைப்படம்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். பல இயக்குநர்களின் உருவாக்கியது மட்டுமின்றி, பல வெற்றி படங்களை தயாரித்த சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

அறிவழகன் இயக்கிய ஈரம் மற்றும் வல்லினம் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகவும், ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டியில் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் மனோ கார்த்திகேயன். மனோ கார்த்திகேயன் சில குறும்படங்களையும் ஆவண படங்களையும் மனோ இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனியைச் சேர்ந்த மனோ கார்த்திகேயன், இயக்குநர் பாரதிராஜாவால் தான் சினிமாவுக்கு ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார். ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய படம் தான் இந்த ஜாங்கோ.

“தமிழ் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான முதல் திரைப்படமாக ஜாங்கோ இருக்கும். குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழும், மேலும் அவை வித்தியாசமான திரைக்கதையுடன் சுவாரசியமான முறையில் காட்டப்படும்,” என்கிறார் இயக்குநர் மனோ கார்த்திகேயன்.

இப்படத்தில் அறிமுக நடிகர் சதீஷ்குமார் மற்றும் டிக்டாக் புகழ் மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அனிதா சம்பத், ஹரீஷ் பேரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் டேனியல் அன் போப் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கார்த்திக்.கே.தில்லை ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் படத்தொகுப்பை கையாளுகிறார்.

ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிச்சரண பாடிய ‘அனலே அனலே’ என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு, வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு என்.இதயா வரிகள் எழுதியுள்ளார். ஜாங்கோ படத்தின் முழு ஆல்பம் சில தினங்கள் முன்பு நடந்த இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.

இதுவரை டைம் டிராவல் கதைகளை கண்ட தமிழ் சினிமா, முதன் முறையாக டைம் லூப் கதையை கொண்ட ஒரு படத்தை விரைவில் காணவிற்கிறது.

Leave a Response