அடங்கர புள்ளிங்களா இல்ல அடங்காத புள்ளிங்களா இவனுங்க?

கூலி வேலை செய்து பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள். மகன்கள் கல்லூரியில் தறுதலையாக வலம் வருகிறார்கள். இப்படி இருக்கும் மாணவர்களை முகநூலில் “புள்ளீங்கோ” என அழைக்கப்படுகிறார்கள். இப்படி கூத்தடிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் தீடீரென புயல் போல் சில திகிலான சம்பவங்கள் நேரிடுகிறது. அவர்களது வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. அதன் பிறகு சஸ்பென்சோடு அவர்களது வாழ்க்கை பயணிக்கின்றது. ‘இதன் உச்சகட்டம் என்ன?’ என்பது தான் சக்சஸ்புல் சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகி உள்ள “பரமு” என்றார் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார் புதுமுகமான மாணிக்ஜெய்.

பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார் கோவிந்தராஜ். சேலம், ஆட்டையாம்பட்டி, ஊட்டி, திருப்பத்தூர், மற்றும் பெங்களூர் முழுவதும் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் மோகன்.

மாணிக் ஜெய், சித்ரா, ஷாலினி, சந்தியா, ரஞ்சித், மதி, சின்னமணி பெஞ்சமின் ஆகியோருடன் ஊர் மக்களும் நடித்துள்ளனர்.

இந்த மாதம் திரைக்கு வருகிறது “பரமு”

Leave a Response