ரஜினி போட்டியிட்டிருந்தால் அது வேறு மாதிரி இருந்திருக்கும் – ஜெயா உறவினர் தீபக் பளீர் பேட்டி…

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் தீபக்கிடம், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற மற்றும் இடை தேர்தல் பற்றி கருத்து கேட்டோம். அதற்கு அவர் பதிலளித்ததாவது பின்வருமாறு, “ரஜினிகாந்த் கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இந்த தேர்தலே வேறு மாதிரி இருந்திருக்கும். ரஜினிகாந்த் போட்டியிடாத தேர்தலை தான் இங்கு மக்களும், அரசியல்வாதிகளும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லுவார்கள். இருக்கட்டுமே அவர் வெய்ட் பண்ணி வரட்டும், இப்போ அதனால என்ன இருக்கு.

இப்போது இவர்கள் எல்லாம் சண்டை போட்டு வந்து போகட்டும். என்னுடைய அத்தை ஜெயலலிதா மேடமும், கலைஞரும் இல்லாததினால், அவரவர் இஷ்டப்படி பேசி வருகிறார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இருவர் இருந்த போது இருந்த அரசியல் பரபரப்பு இப்போது இல்லை.” இவ்வாறு தீபக் நம்மிடம் தெரிவித்தார்.

Leave a Response