எனது பலத்தை நிரூபித்து காட்டுவேன்-அழகிரி ஆவேச பேச்சு..!

வரும் 28-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட உள்ளது. அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி விரைவில் தனது பலத்தை நிரூபித்து காட்ட உள்ளதாக கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மறைந்தார். இதனையடுத்து திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என திமுக நிர்வாகிகள் பலரும் கூறிவருகின்றனர். ஆனால் அவருக்கு எதிராக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவரது அண்ணன் மு.க.அழகிரி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மு.க.அழகிரி, வருகிற செப்டம்பா 5-ஆம் தேதி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெறவுள்ள அமைதி பேரணியில் 75 ஆயிரம் பேர் முதல் 1 லட்சம் போர் வரை கலந்து கொள்வார்கள். அதன் பின்னர் விரைவில் எனது பலத்தை நிரூபித்து காட்டுவேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

Leave a Response