திமுக தலைவர் கருணாநிதி தமிழக மக்கள் போலவே உறுதியாக இருக்கிறார் – ராகுல் காந்தி..!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் சீராக இருக்கிறது, அவரது தமிழக மக்கள் போலவே உறுதியாக இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நிலையில் இருக்கிறார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காவேரி மருத்துவமனைக்கு வந்து அவரை நேரில் சந்தித்தார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தேன். அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார். அவர் உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் விரைவில் குணமடைவார்.

காங்கிரஸ் கட்சிக்கும் கருணாநிதிக்கும் நடுவே நீண்ட கால உறவு உள்ளது. அவர் எங்கள் கட்சியின் நீண்ட கால நண்பர். இந்தியாவின் பெரிய அரசியல் தலைவர் அவர்.

கருணாநிதி மிகவும் உறுதியானவர். தமிழர்களுக்கே உரித்தான திடம் கருணாநிதியிடமும் உள்ளது. தமிழக மக்கள் எப்படி வலைமையானவர்களோ அப்படி கருணாநிதியும் வலிமையானவர்,.

கருணாநிதிக்கு சோனியா காந்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாார். அவர் விரைவில் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். ராகுலை சந்திக்க அந்த திமுகவினர் மட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சியினரும் வந்து இருந்தனர். கடும் மழையிலும் அவர்கள் முழக்கமிட்டன

Leave a Response