கமல் தெருக்கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும்.. ஜெயக்குமார் காட்டம்..!

நடிகர் கமல் தெருக்கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை சின்ன நீலாங்கரையில் அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கினார். மேலும் நாட்டுப்படகு, மீனவர்களுக்கு கண்ணாடி நாரிழை, படகு உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் என்னை பி.ஆர்.ஓ என்று கமல் சொன்னதில் சந்தோஷம் தான், மக்களிடம் அரசின் பணிகளை எடுத்து சொல்லும் உன்னதமான பணி அது என்றார்.

மேலும் நடிகர் கமல் தெருக்கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

Leave a Response