பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜிஎஸ்டி வரி விதிப்பால், சிறு தொழில்கள், நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்போது விலைவாசி உயர்வாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து விலைவாசியை குறைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகொள் விதித்துள்ளார்.