கர்நாடகாவில் யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் வரவேண்டும்-அமைச்சர் ஜெயக்குமார்..!

கர்நாடகாவில் ராமர் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் தமிழகத்திற்கு தண்ணீர் வரவேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலையில்லை.

கர்நாடகாவில் ராமர் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும்.

அந்தந்த மாநில மக்கள் தான் ஆட்சியாளர்களை முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதேபோல் காவிரி வரைவு திட்ட அறிக்கையையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Response