விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார்செய்தி வாசிப்பாளர் திவ்யா . இது தவிர” நண்பன் போட்ட சோறு” என்ற வெப் சீரியலிலும் நடித்து வருகிறார் திவ்யா. இவர் நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இடையில் பிரமாண்ட பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த 6 வருடங்களாக மீடியாவில் இருக்கும் திவ்யா, புதிய தலைமுறை, தந்தி டி.வியில் பணியாற்றினார். தற்போது நியூஸ் 7 சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். இப்போது அவர் சினிமா நடிகையாக மாறிவிட்டார்.