காவிரி நீரை குடிக்கும் வரை கருப்புச்சட்டையை கழற்றப்போவதில்லை-சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்..!

நடிகர் சரத்குமார் காவிர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து மாநிலம் எங்கும் அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சமத்துவ மக்கள் கட்சியும் வலியுறுத்தி வருகின்றது.இந்த கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார், இன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சரத்குமார் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.அவருடன் 200 க்கும் மேற்பட்ட சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி நீரை குடிக்கும் வரை தான், கருப்புச்சட்டையை கழற்றப்போவதில்லை என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சபதமிட்டுள்ளார்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “கர்நாடக தேர்தல் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போடக் கூடாது.

காவிரி நீர் தமிழகம் வரவேண்டும். அதற்காகவே கறுப்பு சட்டை அணிந்துள்ளேன். தமிழகத்துக்கு வரும் காவரி தண்ணீரை குடித்த பின் தான், நான் இந்த கருப்பு சட்டை அகற்றுவேன்” என்று தெரிவித்தார்.

Leave a Response