நம் இந்திய திரையுலகில் இதுவரை பல வித படங்கள் வெளியாகி நாம் பார்த்திருக்கிறோம் . ஆனால் விலங்குகளை வைத்து தமிழில் சில படங்கள் வெளியாகி இருந்தன. விலங்குகளை மட்டும் கதைகருவாக வைத்து படம் பார்ப்பது அது ஹாலிவுட்டில் மட்டுமே சாத்தியம்.
அப்படி தமிழ் சினிமாவில் சாத்தியம் என்று ஒரு திரைகதை உருவாக உள்ளது. இந்த கதையில் ஒரு நாயை தனித்துவமாக வைத்து எடுகின்றனர். இப்படத்தை பாபி சிம்ஹா நடித்த உருமீன் பட இயக்குனரான சக்திவேல் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார்.
மேலும் இந்த படத்தை காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிப்பும் படத்தின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் இந்திய திரையுலகில் புதிய மைல் கல்லை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ஒரு நாய்க்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் உறவையும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் விதத்தையும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளதாகவும் குழந்தைகள் கவரும் விதத்தில் ஒரு அட்வென்சர் படமாக இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன.