2 துண்டான சென்னை புறநகர் மின்சார ரயில்!

rail

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் ஊரப்பாக்கம் ரயில்நிலையம் அருகே 2 துண்டாக பிரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், பெருங்கொளத்தூர்  வழியாக செங்கல்பட்டு வரையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சாலை வழிப்பயணம் என்பது போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதால், பெரும்பாலான மக்கள் மின்சார ரயில்சேவைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு, மின்சார ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.

இந்நிலையில், இன்று சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில் ஒன்று, ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே சென்ற போது இரண்டு துண்டாக பிரிந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஊழியர்கள், ரயிலை ஒன்றாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வழக்கம் போல் இயங்கும் மின்சார ரயில், திடீரென்று இரண்டு துண்டாக பிரிந்தது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Leave a Response