மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை:மோடிக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி..!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதித்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கும் வகையில் மத்திய அரசு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையின்படி மத்திய குழு 5 இடங்களில் பார்வையிட்டது. தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை பார்வையிட்டது. இப்போது மதுரையில் மருத்துவமனையை அமைப்படும் என்ற ஆணையை தமிழக சுகாதார செயலாளருக்கு அனுப்பியுள்ளது.

மதுரை தோப்பூரில் 200 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்புக்காக 100 இடங்கள் ஏற்படுத்தப்படும், 60 செவிலியர்களுக்கு இங்கு இடம் கிடைக்கும். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி ஒத்துழைப்பு கொடுக்கும். மதுரையில் எய்ம்ஸ் அமைக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி, சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Leave a Response