“நான் ருத்ரன்” என்கிறார் பிளாஷ்பேக் “பவர் பாண்டி”

ruthran
ராஜ்கிரன் மற்றும் ரேவதி வைத்து “பவர் பாண்டி” என்ற படத்தை இயக்கியவர் தனுஷ். அந்த படம் நல்ல வெற்றியை அடைந்ததை தொடர்ந்து தற்போது தனது இரண்டாவது படத்தை இயக்க தொடங்கியிருக்கிறார்தனுஷ்.

இந்த படத்தில் தனுஷ் மட்டுமின்றி அவருடன் தற்போதுள்ள முன்னணி ஹீரோவும் நடிக்கிறாராம். இந்த படத்தை பாகுபலி படத்தைப்போன்று சரித்திர கதையில் இயக்கும் தனுஷ், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.

அதனால் மூன்று மொழிகளுக்கும் பரிட்சயமான நடிகர் நடிகைகளை இந்த படத்தில் நடிக்க வைக்கிறார். அதோடு, இப்படத்திற்காக பல தலைப்புகளை யோசித்து வந்தவர் இப்போது, “நான் ருத்ரன்” என்ற தலைப்பை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Response