தினகரன் தொப்பிக்கு ஆப்பு வைத்த அதிமுக!

admk office

ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்துள்ள டிடிவி தினகரன், தனக்கு தொப்பி சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டில்லி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

ttv12._L_styvpfஅந்த மனு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து ஆஜரான தேர்தல் அலுவலக வக்கீல், ‘தினகரனுக்கு தொப்பி சின்னத்தை வழங்குவதில் எங்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் வேறு சுயேட்சை வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தை கேட்டு கோரிக்கை விடுத்தால் தொப்பி சின்னம் தினகரனுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்படும்’ என்று விளக்கம் அளித்தார்.

இதற்கிடையில் இதுவரை சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தவர்களில் 3 பேர் தொப்பி சின்னத்தை கேட்டுள்ளதாகவும், இவர்கள் மூவரும் அதிமுக ஏற்பாடு செய்த சுயேட்சைகள் என்றும் கூறப்படுகிறது. இதனால் தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக வைத்த ஆப்பால் ஆடி போய் உள்ளார் தினகரன். இந்நிலையில் தினகரன் மீது உள்ள பழைய வழக்குகளை தூசி தட்ட சொல்லி உத்தரவு பறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Response