தமிழகத்தில் ஒரு சில மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை!

Rain_Road

கடலூர் மற்றும் பண்ருட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

naakai
 திருவாரூர்,நன்னிலம் குடவாசல் மாற்று சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் நாகப்பட்டினம்,சீர்காழி ,கொள்ளிடம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மீண்டும் மழை கொட்டுகிறது. அதிகாலை முதல் மழை விடாமல் பெய்து வருகிறது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Leave a Response