கனமழை: சென்னை உட்பட ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(டிச.,01) விடுமுறை அறிவிப்பு!

201711122024499552_Heavy-rain-in-various-places-in-Chennai_SECVPF

கனமழை காரணமாக சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி  மாவட்டத்தில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(டிச.,01) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை:

கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை ‘ஓகி’ புயலாக மாறி அங்கேயே நீடிப்பதால் அடுத்த 12 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது.

விடுமுறை:

இதனையடுத்து மாணவர்கள் நலன்கருதி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். சென்னை , தேனி மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response