நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நியூட்ரினோ ஆய்வ மைய திட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.