ஞாயிறுப்பொழுதைத் மழையுடன் தொடங்கிய சென்னை மக்கள்!

 

-rainசிறிது நாட்கள் இடைவெளிக்குப் பிறகு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைபெய்யத் தொடங்கி உள்ளது.

சில வாரங்களுக்கு முன் வடக்கிழக்குப் பருவ மழை காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

Rain_Roadதற்போது தெற்கு வங்க கடலை ஒட்டியுள்ள இலங்கை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால், தென் மாவட்டங்களில் பல இடங்களிலும் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது. அதன்படி படி சென்னையில் இன்று காலை மழை பெய்துவருகிறது.

mrng

எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ராயபுரம், மீனம்பாக்கம், ஆலந்தூர், அண்ணாநகர் உட்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சில கால இடைவெளிக்குப் பின் பெய்த மிதமான மழையால் சென்னை மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

 

Leave a Response