கந்து வட்டி பிரச்சினை- மனம் திறந்தார் நடிகர் பார்த்திபன்!

Parthibanr

கந்து வட்டியால் பாதிக்கப்பட்டதாக பார்த்திபன் கூறியுள்ளார். அவர் கூறியது: அசோக்குமாரின் மரணம் நம் சினிமா கனவுக்குள்ளே பெரிய கல்லை இறக்கி வைத்துவிட்டு போயிருக்கிறது. மனம் பிணமாய் கணக்கிறது. அசோக்குமார் போன்ற எமோஷனலாக, சென்சிட்டிவாக முடிவு எடுக்கக்கூடிய மென்மையான மனிதர்கள் இனி இங்கே ஜீவிக்கவே முடியாது என்பதற்கு இந்த கொலை ஒரு எடுத்துக்காட்டு.

இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. நண்பர்கள் கூட கஷ்டப்படும் வேளையில் நமக்கு உதவி செய்வதில்லை. இந்த வட்டிக்கு விடுபவர்கள்தான் உதவுவார்கள். கொடியவர்களிடம் தான் பணம் வாங்குகிறோம் என்ற நிலையை புரிந்துகொண்டு அதை வாங்காமல் இருக்க என்ன பண்ணுவது. ஒருவேளை வாங்கிவிட்டால் என்ன பண்ணுவது என்று யோசிக்க வேண்டும். உதாரணத்துக்கு வெறும் ரூ.20 லட்சம் கடனுக்காக வளசரவாக்கத்தில் இருந்த 75 லட்சம் மதிப்புள்ள என் பங்களாவை விற்றேன். இன்று அதன் மதிப்பு 7 கோடி ரூபாய். கந்துவட்டி பிரச்னையிலிருந்து நாம் தப்பிக்க ஒரே வழி நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்கிற கூட்டுறவு அமைப்புதான். இனியாவது இந்த மாதிரி ஒரு பலி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பார்த்திபன் கூறி உள்ளார்.

Leave a Response