துப்பறிவாளன் விட்டில் திருட்டு!

vishal1

சென்னை அண்ணாநகரில் உள்ள  நடிகர் விஷால் வீட்டில் இருந்த தங்கமோதிரம், கம்மல் மற்றும் வளையல்கள் திடீரென காணவில்லை. யாரோ திருடிச்சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில்  விஷாலின் மேலாளர் ரகுபதி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரில், ‘புஷ்பா என்ற பெண் எங்கள் வீட்டில் வேலை செய்து வந்தார். அவர் தற்போது வேலைக்கு வரவில்லை. அவர் மீது சந்தேகம் உள்ளது’ என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Response