வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், நான் ஒர் அரசியல் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவன். நான், என் மனைவி ராதிகாவுடன் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வந்தேன். அதை படமெடுத்து செய்தி வெளியிட்டு விளம்பரம் தேட நான் மோடி இல்லை என்றார். மேலும் தனக்கு அரசியல் பாடத்தை சொல்லித்தந்தவர் கருணாநிதி எனவும் கூறினார் அவர்.