திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்:-
இயக்குநர் சங்கர் திரைப்படத்தில் காண்பிக்கப்படும் பிரம்மாண்டத்தை போன்று வருமான வரித் துறை சோதனை என்பது மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டது. இந்த படம் எந்த அளவுக்கு ஹிட் ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வருமான வரித் துறையினர் கண்ணியமாக நடந்து கொண்டனர். ஒரே ஒரு குறை, 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய சோதனையை 3 நாட்களுக்கு நடத்துகின்றனர்.
வருமான வரித் துறை சோதனையைக் கண்டு, நாங்கள் பயப்படவில்லை. தமிழகத்தில் நாங்கள் இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. எங்களை விரட்டுவதற்கு ஆசைப்படுகின்றனர். வருமான வரித் துறை சோதனையை சட்டப்படி சந்திப்போம். நாங்கள், எதற்கும் பயந்தவர்கள் கிடையாது. இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும். அதன் தீர்ப்பு வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டதன் பேரில் சிகிச்சை பெறும் வீடியோ எடுக்கப்பட்டது. அந்த வீடியோவுக்காக சோதனை நடைபெற்றதா? என்று தெரியாது. விசாரணை ஆணையம் கேட்டால் வீடியோவை கொடுத்து விடுவோம். அதே நேரத்தில் வீடியோவை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் விசாரணை ஆணையத்திடம் வழங்குவோம் என்று அவர் கூறினார்.