சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்காகும் பாடல்: சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!

 

demonetization-anthem-tamil-lyriமத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்து ஒருவருடம் ஆனதை அடுத்து சமீபத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை வெளியிட்டார். ‘தட்றோம் தூக்றோம்’ படம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அதில் பணமதிப்பிழப்பினால் மக்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து கபிலன் வைரமுத்து எழுதிய பாடலை நடிகர் சிம்பு தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் பட்ட கஷ்டங்கள் குறித்த இந்த இந்த பாடலை சிம்புவே பாடியிருந்தார். இந்த பாடலை அனைத்து தரப்பினர்களும். குறிப்பாக இளைஞர்கள் இந்த பாடலை சமூக வலைத்தளங்களில் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் சிம்பு வீட்டின் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் சிம்புவின் தி.நகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Response