நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அறம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள இரண்டு தியேட்டர்களில் நடிகை நயன்தாரா இன்று இந்தத் திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்தார்.
‘அறம்’ திரைப்படத்தை கோபி நயினார் இயக்கி உள்ளார். ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் போராட்டமே இந்தப்படத்தின் கதையம்சம் ஆகும். கதையின் ஊடே சமூகப்பிரச்னைகளையும் இந்தப்படம் பேசி உள்ளதால் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை இன்று சென்னை கே.கே.நகர் காசி திரையரங்கில் ரசிகர்களுடன் நடிகை நயன்தாரா பார்த்தார். நயன்தாராவைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள். பின்னர் நயன்தாரா உதயம் திரையரங்கிற்கு சென்று அங்கும் சிறிது நேரம் ரசிகர்களுடன் ‘அறம்’ படத்தை பார்த்தார்