கும்மிடிப்பூண்டியில் ராட்சச காட்டுகுளவி கொட்டியதில் செய்தியாளர் உள்ளிட்ட 3பேர் படுகாயம்!

n 2
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எருக்குவாய் ஊராட்சிக்கு உள்பட்ட மணலியில் விஷக் குளவிகள் வந்து தாக்குவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

எருக்குவாய் மணலி கிராம காட்டு பகுதியில் அம்மா திட்ட முகாம் குறித்து செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்ற போது ராட்சச காட்டுகுளவி ஆயிரக்கணக்கில் கூட்டமாக வந்து தாக்கியதில் செய்தியாளர் (சாமிநாதன் தந்தி நாளிதழ் ) உள்ளிட்ட கிராமத்தினர் 3பேர் படுகாயம் அரசு மற்றும் தனியார் மருதுவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தந்து காட்டுகுளவிகளை கொன்று அழித்தனர் .செய்தியாளர் சாமிநாதன் சென்னை எஸ் எம் எப்பில் தனியார் மருத்துவமனையில்` அனுமதி கிராமத்தினர் இருவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Response