சசிகலா சகோதரர் வீட்டில் சோதனை முடிந்தது!

dhivagaran
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சுந்தர்வக்கோட்டையில் உள்ள சசிகலா சகோதரர் திவாகரன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய நேற்றைய சோதனை முடிந்துள்ளது.

அவருக்கு சொந்தமான வீடுகளை அடையாளம் காட்டுவதற்காக வருமான வரித் துறை அதிகாரிகள் தங்களுடன் திவாகரனை அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும் ரிஷியூர் பகுதியில் அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும், அங்குள்ள அவரது நண்பர் தமிழ்ச்செல்வன் வீட்டிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சசிகலா உறவினர்களை குறிவைத்து நடத்தப்படும் சோதனையானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திவாகரன் தெரிவித்துள்ளார். சோதனைக்கு முழு அதரவு அளித்தாகவும் சோதனையில் ஏதுவும் சிக்கவில்லை என்றும் தினகரன் தரப்பினர் கூறியுள்ளனர்.

Leave a Response