கல்லூரி விடுதியில் சுகாதாரமில்லை- மாணவர்கள் போராட்டம்!

karur

கரூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த விடுதி மாணவி ஜனனி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கல்லூரி விடுதி சுகாதாரமில்லை என்று 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் அருகே காருடையம்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி ஜனனி 2ம் ஆண்டு படித்து வந்தார். காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஜனனி நேற்று முன்தினம் இரவு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி சக மாணவிகளிடம் கூறியுள்ளார்.

karur2

இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்ல கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியை உரிய நேரத்திற்கு அழைத்து செல்ல அனுமதி அளிக்காததால் தான் மாணவி உயிரிழந்தார் என்று கூறி கல்லூரியில் படிக்கும் சக மாணவ, மாணவிகள் 500 பேர் வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரி வளாகத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Response