“ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடிக்கிற நேரத்திலேயே இவ்வளவு வன்முறை- திருமாவளவன்

thiruma

கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதியிருந்தார். இந்தக் கருத்துக்கு தீவிர வலதுசாரி அமைப்பான இந்து மகாசபா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கமல்ஹாசனையும் அவர் போன்று பேசுபவர்களையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று இந்துமகாசபை துணைத் தலைவர் அசோக் சர்மா கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கமலின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

kamal1

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்;-

“ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடிக்கிற நேரத்திலேயே இவ்வளவு வன்முறை வெறியாட்டத்தை கையில் எடுப்பவர்கள், தமிழகத்தில் ஒரு சக்தி வளர்ந்து விட்டால், ஆட்சியை கைப்பற்றக்கூடிய நிலையை எட்டிவிட்டால் அல்லது ஆட்சியையே கைப்பற்றிவிட்டால் தமிழ்நாடு என்ன ஆகும்? எனவே சாதிய மதவாத சக்திகள் தமிழகத்தில் வலுப்பெற்றுவிடக்கூடாது. அவர்கள் தமிழகத்தில் காலூன்றிவிடக்கூடாது என்பதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள், ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடிக்கொண்டிருக்கிறோம். இதனால் நடிகர் கமல்ஹாசன் இந்துத் தீவிரவாதத்தை சுட்டிக்காட்டியுள்ளதை வரவேற்கிறேன்.” என்று கூறினார்.

Leave a Response