விஷம் குடித்து விவசாயி தற்கொலை- மனைவி பரபரப்பு புகார்!

visham

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கணக்கம்பட்டியை சேர்ந்த பழனியப்பன் வயது 44, இவரது தாயார் சின்னாத்தா தம்பிகள் தங்கராஜ், பூமிநாதன் பெயரில் கீரனுர் ICICI வங்கியில் விவசாய கரும்பு லோன் வாங்கியுள்ளார். மழை இல்லாமல் விவசாயம் காய்ந்து போன நிலையில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத பழனியப்பன் வங்கியின் டார்ச்சர் தாங்க முடியாமல் விஷம் குடித்து நேற்று இரவு இறந்துள்ளார் என்பது தெரிய வந்தது. எனவே பழனியப்பன் இறப்பிற்கு காரணம் அந்த வங்கி நிர்வாகம் தான் என்று உறவினர்கள் கதறல். மேலும் இது குறித்து அன்னவாசல் காவல் நிலைய போலீசார் உண்மையை மூடி மறைப்பதாகவும், பழனியப்பன் வேறு காரணமாக தான் இறந்தார் என போலிஸ் திசை திருப்புகிறது என உறவினர்கள் குற்றசாட்டு.

Leave a Response