மூத்த அமைச்சரின் வீட்டில் பைனான்சியர் பதுங்கியுள்ளதாக தகவல்!

ashokumar

அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் சசிகுமார் நேரில் ஆஜராகி துணை ஆணையர் அரவிந்தனின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அன்புசெழியன் மீது இன்னும் பல்வேறு புகார்கள் வரும் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

MDUANBU-CHEZHAIAN1இந்த நிலையில் தலைமறைவான சினிமா பைனான்சியர் அன்புசெழியனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

 

தேனியில் உள்ள மூத்த அமைச்சரின் ஒருவர் வீட்டில் அன்புச்செழியன் தங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, போலீசார் தேனி விரைந்து சென்றுள்ளனர் என்றும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தனிப்படை போலீசார் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Response