நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க திமுக முடிவு!

1a_12107

பணமதிப்பு ரத்து நடவடிக்கை எடுத்த மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. திமுக தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்து கருப்பு தின ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். ஒரே கருத்துடைய கட்சிகள் அனைத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பணமதிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வணிகர்கள், விவசாயிகள், திரைத்துறையினரும் பங்கேற்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Response