மும்பையின் எல்பின்ஸ்டோன் சாலையையும், பாரல் புறநகர் ரயிலையும் இணைக்கும் நடைபாதை மேம்பாலம் உள்ளது. இங்கு மக்கள் நடந்து சென்ற போது, மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனையடுத்து அங்கு மக்கள் அலறியடித்து ஓட முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 3 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.