ஜெ மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் கட்சி தலைவர்கள் கோரிக்கை!

mk_stalin

ஜெயலலிதா குறித்து தெரிவித்த தகவல்கள் பொய் என அமைச்சர் வெளிப்படையாக கூறியுள்ளனர். எனவே அரசியல் சட்டப்படி உண்மையாக நடந்து கொள்வேன் என உறுதியேற்று அமைச்சரானோர் பொய் கூறுகின்றனர். எனவே பொய் கோரிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்.

muthhu

ஜெயலிலதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். சிபிஐ விசாரிக்காவிட்டால் பணியில் இருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும். மேலும் ஜெயலிலதா மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ramadoss

ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்ததாக பொய் கூறிய அமைச்சர்கள் மீது வழக்குப்பதிய வேண்டும் என ராமதாஸ் வலியுத்தியுள்ளார். ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உறுதி உள்ளது என்று ராமதாஸ் தெரிவித்தார்.

Tamilisai-Soundararajan (1)

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லியில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். சரியான விசாரணை என்பது சிபிஐ விசாரணையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் எல்லாவற்றுக்கும் சிபிஐ விசாரணை கோருவது தேவையற்றது என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

Leave a Response