ஐடி இளைஞர் ஹரிஹர சுதன் மரணத்துக்கு இரங்கல்!

mk

சென்னையைச் சேர்ந்தவர் ஹரிஹர சுதன். இவர் பின்லாந்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி நண்பர்களுடன் வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.

அதனையடுத்து அவரின் பெற்றோர் வெளியுறவுத்துறைக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

hari1

இந்நிலையில் அவரது உடல் பின்லாந்தில் உள்ள ஹெர்னஸரி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டதாக அங்குள்ள போலீசார் தெரிவித்தனர்.

mk1

இதுகுறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் டுவிட்டரில், ஹரிஹர சுதன் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவருடைய உடலை இந்தியா கொண்டுவர வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Response